Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுதமிக்கு என் வாழ்த்துக்கள் : மனம் திறந்த கமல்ஹாசன்

கவுதமிக்கு என் வாழ்த்துக்கள் : மனம் திறந்த கமல்ஹாசன்

Webdunia
புதன், 2 நவம்பர் 2016 (10:15 IST)
நடிகை கவுதமி உடனான பிரிவு குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் கமல்ஹாசன் தனது மனைவி சரிகாவை பிரிந்த பிறகு கவுமதியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இருவரும் கணவன் மனைவி போலவே எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.
 
இந்நிலையில் திடீரென கவுதமி, நடிகர் கமல்ஹாசன் உடனான 13 ஆண்டுகால வாழ்க்கை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். கமல் ஹாசனை பிரியும் முடிவில் எந்த அனுதாபமும் மற்றும் குற்றச்சாட்டையும் உருவாக்கும் எந்த உள்நோக்கமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இருவர் இடையே என்ன பிரச்சனை என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை. தனது மகளின் எதிர்காலம் கருதியே இந்த முடிவு என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில் ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன் “கவுதமிக்கு எது மகிழ்ச்சியோ, எது நிம்மதியோ அதை தேடி அவர் செல்வதில் எனக்கும் மகிழ்ச்சியே. என்னுடைய உணர்வுகள் இதில் முக்கியம் இல்லை. கவுதமி மற்றும் அவரின் மகள் சுப்பு சவுகரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டியதுதான் முக்கியம். 
 
அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அவர்களுக்கு எப்போது என்ன தேவைப்பட்டாலும் நான் இருக்கிறேன் என்பதை அவர்கள் உணர வேண்டும் என விரும்புகிறேன்.
 
ஸ்ருதி, அக்‌ஷரா மற்றும் சுப்புலட்சுமி என 3 மகள்கள் இருப்பதாய்தான் உணர்கிறேன். இந்த உலகிலேயே மிக அதிர்ஷ்டகார தந்தை நான் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments