Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டனை பயத்தால் அதிகாரம் பெறுவது.. - யாரைச் சொல்கிறார் கமல்ஹாசன்?

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2017 (16:12 IST)
சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன், சமூதாயத்தில் நிகழும் பல்வேறு சம்பவங்களுக்கு தன்னுடைய கருத்தை கூறி வருகிறார். 


 

 
தமிழ்நாடு அரசியலை பொறுத்த வரை, முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆகிய இருவருக்கும் இடையே உள்ள மோதல்தான் எல்லோராலும் கவனிக்கப்பட்டு வருகிறது...
 
அந்நிலையில், சமீப காலமாக நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் அரசியல் ரீதியான கருத்துகளையும் தெரிவித்து வருகிறார். ஏற்கனவே அவர், ஓ.பி.எஸ்-ற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்திருந்தார். தற்போது அவரை மாற்ற வேண்டிய அவசியம் ஏதுவுமில்லை மேலும், சசிகலாவை முதல்வராக்குவதில் எனக்கு உடன்பாடில்லை என பகீரங்கமாக கருத்து தெரிவித்தார்.
 
இந்நிலையில், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “ அதிகாரம் இரண்டு வகையானது. ஒன்று தண்டனை பயத்தால் பெறுவது, மற்றொன்று, அன்பின் செய்கையால் பெறுவது. இது என் மானசீகமான ஹீரோ காந்தி சொன்னது ” எனக்குறிப்பிட்டுள்ளார்.


 

 
விரைவில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை, சசிகலா சந்திக்கவுள்ளதால், முதல்வர் பதவியை அவர் அமர விரும்புவதாக செய்திகள் வெளியாகி வரும் இந்த வேலையில், கமல்ஹாசன் இப்படி கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது...
 

ஈரான் அதிபர் இறப்பிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு!

இரவில் பகலை காட்டிய அதிசயமான விண்கல்! வாய்பிளந்த ஸ்பெயின், போர்ச்சுக்கல் மக்கள்! – வைரலாகும் வீடியோ!

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments