மூத்த வயதுள்ள பெண்ணுடன் நடிகருக்கு திருமணம் : தந்தை பகீர் புகார்
மூத்த வயதுள்ள பெண்ணுடன் நடிகருக்கு திருமணம்
தன்னுடைய மகனுக்கு வயதில் மூத்த பெண்ணுடன் திருமணம் செய்ய உள்ளதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நடிகரின் தந்தை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கே.கே. நகரை சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது மகன் மலையம்மான்(22). இவர் 2013ம் ஆண்டில் வெளிவந்த ‘கோலாகலம்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சரண்யா மோகன் நடித்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன் வீட்டிலிருந்த சென்ற மலையம்மான் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை தேடிய போது, திருச்சி தீரன் நகரில் உள்ள அமுதா என்பவரின் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்று அவரின் பெற்றொர் அழைத்து அவர் வரவில்லை.
இந்நிலையில், அவரின் தந்தை போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் “என் மகனை மூளைச்சலவை செய்து, அவரை விட 15 வயது மூத்தப் பெண்ணை திருமணம் செய்து வைக்க அமுதா என்பவர் முயற்சி செய்து வருகிறார். எங்களின் சொத்துக்களை பெறவே அவர் இப்படி செய்கிறார். எனவே என் மகனை மீட்டுத்தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.