Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி, இலங்கைத் தமிழர் விவகாரங்களில் நடிகர் சங்கம் தலையிடாது : விஷால் பகிரங்க அறிவிப்பு

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2015 (15:29 IST)
காவிரி, இலங்கைத் தமிழர் விவகாரங்களில் தென்னிந்திய நடிகர் சங்கம் தலையிடாது என்று நடிகர் சங்கத்தின் பொருளாலரும், நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார்.


 
 
சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய விஷால் “ நான் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் “கதகளி” என்ற படத்தில் நடித்துவருகிறேன். அடுத்தது முத்தையா இயக்கத்தில் “மருது” என்ற படத்தில் நடிக்கிறேன். 
 
நடிகர் ராதாரவியுடன் மருது படத்தில் நடிப்பது இன்னும் முடிவாகவில்லை. நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்க வேண்டும் என்பதே என் முதல் குறிக்கோள். நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் நடிகர் சங்க இடத்தின் பத்திரங்களை ஒப்படைத்து விட்டார். 2017 ஆம் வருடத்திற்குள் நடிகர் சங்க கட்டிடத்தை கண்டிப்பாக கட்டி விடுவோம்.
 
காவிரி நீர் பிரச்சனை, இலங்கைத் தமிழர் விவகாரங்களில் நடிகர் சங்கம் தலையிடாது. அதே நேரம் அதற்கு என்னுடைய தனிப்பட்ட ஆதரவு எப்போதும் உண்டு” என்று தெரிவித்தார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments