Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மெல்ல மெல்ல குறையும் கொரோனா எண்ணிக்கை அபாயம்!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (14:32 IST)
கொரோனா சிகிச்சையில் உள்ளோர் சென்னை 9,868 பேர் மட்டுமே என தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை நேற்று தமிழகத்தில் 5325 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 557,999 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் தமிழகத்தில் 5363 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 502,740 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்த 5325 பேர்களில் 980 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதோடு கொரோனா சிகிச்சையில் உள்ளோர் சென்னை 9,868 பேர் மட்டுமே எனவும் இதற்கு அடுத்தப்படியாக கோவையில் 4,630 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments