Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதையில் எஸ்.ஐயை தாக்கிய நபருக்கு மாவுக்கட்டு: கழிவறையில் வழுக்கி விழுந்தாரா?

Webdunia
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (15:59 IST)
கடந்த சில மாதங்களாகவே தமிழக காவல் துறையினரிடம் சிக்கும் குற்றவாளிகள் அடுத்த நாள் காலையில் கழிவறையில் வழுக்கி விழுந்து மாவுகட்டு போடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இது குறித்து சமூக நல ஆர்வலர்களும் ஏன் நீதிமன்றமும் கூட சில சமயம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு மாவுக்கட்டு போட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நேற்று முன்தினம் ராமநாதபுரம் பகுதியில் தேனீர் அருந்திக் கொண்டிருந்த உதவி ஆய்வாளர் ஜெயபாண்டி என்பவரை ஒரு சிலர் சுற்றி வளைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உதவி ஆய்வாளர் ஜெயபாண்டி படுகாயம் அடைந்து தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை செய்து வருகிறார் 
 
இந்த நிலையில் உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியை தாக்கியது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில் கணேசன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். கணேசன் கைது செய்யப்பட்ட சிலமணி நேரங்களில் அவர் கழிவறையில் விழுந்ததாக கையில் மாவுக்கட்டு போட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய கூட்டாளிகளை தற்போது போலீஸ் தேடிக் கொண்டிருக்கின்றனர். போலீசில் பிடிபட்ட கணேசன், தான் மதுபோதையில் போலீசாரை தாக்கி விட்டதாகவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் பதிவு செய்த வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments