Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவரை பிரிந்து வாழும் பெண் மீது ஆசிட் வீச்சு: சேலத்தில் கொடூரம்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (12:56 IST)
சேலத்தில் கணவனை பிரிந்து வாழும் பெண் மீது நபர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சேலம் குகை லோகுசெட்டி தெருவை சேர்ந்த காயத்திரி(31). இவர் தன் கணவருடன் ஏற்பட்ட தகராறால், அவரை பிரிந்து தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
 
அப்போது அவருக்கு சீனிவாசன் என்பவரோடு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காயத்ரியின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர். இதனால் காயத்ரி சீனிவாசனுடனான தொடர்பை முற்றிலுமாக துண்டித்துள்ளார்.
 
ஆனால் சீனிவாசன் தொடர்ச்சியாக காயத்ரியை தொல்லை செய்து வந்துள்ளார். என்னிடம் பேசவில்லை என்றால் உன் மீது ஆசிட் வீசுவேன் என்றும் மிரட்டியுள்ளார். ஆனால் காயத்ரி இதனை கண்டுகொள்ளவில்லை.
 
இந்நிலையில் இன்று காலை காயத்ரி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சீனிவாசன் காயத்ரி மீது ஆசிட் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளார். படுகாயமடைந்த காயத்ரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து தப்பியோடிய சீனிவாசனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments