Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு.! மார்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

Senthil Velan
வெள்ளி, 22 மார்ச் 2024 (17:38 IST)
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை மார்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பல கோடி ரூபாய் சொத்து குவித்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகக் கூறி, அமலாக்கத்துறை தன்னை ஒரு சாட்சியாக இணைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளது.
 
இந்நிலையில்  தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு மற்றும் அமலாக்கத் துறையினர் யாரும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மட்டும் ஆஜராகினர்.

ALSO READ: பூட்டானில் பிரதமர் மோடி..! உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!
 
இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை மாவட்ட நீதிபதி செல்வம் வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments