Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொன்னேரி-திருவொற்றியூர் ; டிராக்டர் மீது லாரி மோதி விபத்து :இருவர் உடல் நசுங்கி பலி

பொன்னேரி-திருவொற்றியூர் ; டிராக்டர் மீது லாரி மோதி விபத்து :இருவர் உடல் நசுங்கி பலி
, திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (18:18 IST)
நந்தியம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் சுதாகர், சரண்ராஜ் இருவரும் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டுசென்று சப்ளை செய்யும் பணியை மேற்கொண்டுவந்தனர்.


 

 
இன்று, வழக்கம்போல்  தண்ணீர் விநியோகம் செய்து  விட்டு திரும்பி வந்தபோது பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஆந்திராவில் இருந்து இரும்பு உருளை லோடு ஏற்றிவந்த லாரி டிராக்டரின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது. 
 
இதில் சுதாகர், சரண்ராஜ் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீஞ்சூர் போலீசார் இருவரது உடலைமீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து  விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.
 
விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய ஆந்திரமாநில லாரி ஓட்டுனரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த இருவர் லாரிமோதி விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதிமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.570 கோடி விவகாரம் ; கண்டெய்னர் லாரிகளின் பதிவெண்கள் போலி : சிபிஐ வழக்குப்பதிவு