Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண் இமைக்கும் நேரத்தில் மோதிய கார்.. மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்

Arun Prasath
புதன், 20 நவம்பர் 2019 (15:47 IST)
கண் இமைக்கும் நேரத்தில் கார் வந்து மோதியதில், மோட்டார் பைக்கில் வந்த கல்லூரி மாணவி தூக்கி எறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூரை சேர்ந்த கீர்த்தனா என்ற இளம்பெண், தனியார் கல்லூரியில் பி.எட். முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மோட்டார் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, துறைமங்கலம் சாலை அருகே குறுக்கே வந்த கார் மோதியது.

இதில் படுகாயமடைந்த கீர்த்தனாவை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் மாணவி மீது மோதியது அரியலூர் மாவட்ட ஆட்சியர் கார் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் கார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments