Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண் இமைக்கும் நேரத்தில் மோதிய கார்.. மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்

Arun Prasath
புதன், 20 நவம்பர் 2019 (15:47 IST)
கண் இமைக்கும் நேரத்தில் கார் வந்து மோதியதில், மோட்டார் பைக்கில் வந்த கல்லூரி மாணவி தூக்கி எறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூரை சேர்ந்த கீர்த்தனா என்ற இளம்பெண், தனியார் கல்லூரியில் பி.எட். முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மோட்டார் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, துறைமங்கலம் சாலை அருகே குறுக்கே வந்த கார் மோதியது.

இதில் படுகாயமடைந்த கீர்த்தனாவை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் மாணவி மீது மோதியது அரியலூர் மாவட்ட ஆட்சியர் கார் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் கார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

படி படி என்று சொன்னதால் தந்தை தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!

என்னுடன் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தேர்தலில் போட்டியிட சீட்.. டாக்டர் ராமதாஸ்

2 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments