Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றத்தின் முடிவை ஏற்க வேண்டும்; ஜெயலலிதாவிற்கு வாழ்த்து - இல.கணேசன்

Webdunia
ஞாயிறு, 24 மே 2015 (10:39 IST)
நீதிமன்றத்தின் முடிவை ஏற்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவிற்கு வாழ்த்துகளையும் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
 
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் தமிழக பாஜக மூத்த தலைவர்கள் இல.கணேசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், ”பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு அழைப்பு வந்தது. மகிழ்ச்சியுடன் நான் கலந்து கொண்டு இருக்கிறேன்.
 
ஏற்கனவே மக்களால் தேர்வு செய்யப்பட்டு ஆட்சி அமைத்த ஜெயலலிதா நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கின் தீர்ப்பு வேறு மாதிரி அமைந்ததால் சட்டப்படி பதவி விலக வேண்டியதாயிற்று. அதன் பிறகு மேல்முறையீட்டு மனு விசாரணையில் அவர் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு வந்தது.
 
நீதிமன்றத்தின் முடிவை ஏற்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. புதிய அரசுக்கு எங்கள் வாழ்த்துக்கள். ஒரு இடைக்கால அரசு மாறுபட்டு ஜெயலலிதா நேரடி பொறுப்புக்கு வந்துள்ளதால் ஆட்சி சிறப்பாகவும், வேகமாகவும் இருக்கும்” என்று கூறினார்.

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

Show comments