Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளீஸ்.. என்னை யாராவது ஜாமீனில் எடுங்க - சிறையில் கதறும் அபிராமி

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (17:58 IST)
சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, பிரியாணிக்கடை சுந்தரத்தின் மீது கொண்ட கள்ளக்காதலால் 4 வயது மகள் கார்னிகா மற்றும் 7 வயது மகன் அஜய் ஆகிய இருவரையும் கொலை செய்தார். 

 
பின்னர் கள்ளக்காதலனுடன் கேரளாவுக்கு ஓடிப்போக முயற்சிக்கும்போது நாகர்கோவிலில் அபிராமி கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல், அவரின் கள்ளக்காதலன் சுந்தரமும் கூட்டு சதி பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
சிறையில், அவ்வப்போது தியானம், யோகா என பொழுதை கழித்தாலும், யாரிடமும் பேசாமல் தனிமையை விரும்பும் அபிராமி, அடிக்கடி அழுது கொண்டே இருக்கிறாராம். அவரின் பெற்றோர்கள் உட்பட அவரின் உறவினர்கள் யாரும் இதுவரை அவரை சிறையில் சென்று பார்க்கவில்லை. எனவே, வேதனை அடைந்துள்ள அபிராமி, என் உறவினர்கள் யாரிடமாவது கூறி என்னை ஜாமீன் எடுக்க சொல்லுங்கள் என சிறை அதிகாரிகளிடம் கதறி வருகிறாராம்.
 
அபிராமியின் கொடூர செயலால் இரண்டு குழந்தைகளை இழந்து ஒருபக்கம் கணவர் விஜய் தவித்து வரும் நிலையில் தனது மகளின் செயலால் வெளியே தலைகாட்ட முடியாத நிலையில் அவரின் பெற்றோர் உள்ளனர். அபிராமி மீது கடுமையான கோபத்தில் இருக்கும் அவர்கள், அவளுக்காக ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்க மாட்டோம் என ஏற்கனவே கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாத கைக்குழந்தையை தலைகீழாக பிடித்து சென்ற தந்தை.. வரதட்சணை தரவில்லை என கோபம்..!

கோவில் நிலத்தில் ஏழை மக்களுக்கு வீடு கட்டி தருவேன்: எடப்பாடி பழனிசாமி

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

அடுத்த கட்டுரையில்
Show comments