Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை சந்தித்து ஆறுதல் பெற்ற அபிராமி கணவர் விஜய்

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2018 (19:00 IST)
சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி என்ற பெண் கள்ளக்காதலனுடன் வாழ தான் பெற்ற இரண்டு குழந்தைகளை கொலை செய்தார் என்ற அதிர்ச்சி செய்தி தமிழகத்தையே உலுக்கியது. அபிராமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும் அவரது கணவர் விஜய்க்கு ஏற்பட்ட இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்

இந்த நிலையில் விஜய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் ரஜினியின் தீவிர ரசிகர் என்ற செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனையறிந்த ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் விஜய்யை தொடர்பு கொண்டு தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்று கொண்ட விஜய், சற்றுமுன் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் அவரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது கண்ணீர் விட்ட விஜய்க்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments