Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 19 ஏப்ரல் 2018 (16:37 IST)
முன்னாள் ஜனாதிபதியும் தமிழக மக்களின் மனதில் மட்டுமின்றி இந்திய இளைஞர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்தவருமான அப்துல்கலாம் அவர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே
 
இந்த பள்ளியை பார்க்கும் அனைவருக்கும் அப்துல்கலாமின் ஞாபகம் வரும். இங்கு படிக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் நாம் அப்துல்கலாம் படித்த பள்ளியில் படிக்கின்றோம் என்ற பெருமை இருக்கும் 
 
இந்த நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் இந்த பள்ளியின் மின் இணைப்பு இன்று திடீரென துண்டிக்கப்பட்டது.  இதற்கு காரணம் இந்த பள்ளியின் நிர்வாகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின் கட்டணத்தை கட்டவில்லையாம். மின்வாரிய அதிகாரிகள் பலமுறை கேட்டுக்கொண்டும் மாவட்ட கல்வி அதிகாரிகள் இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை என்பதால் தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக மாவட்ட கல்வி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments