Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்துல் கலாம் மறைவு - அதிமுக நிகழ்ச்சிகள் ஒரு வாரம் ரத்து: ஜெயலலிதா அறிவிப்பு

Webdunia
புதன், 29 ஜூலை 2015 (01:40 IST)
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு காரணமாக, அதிமுக நிகழ்ச்சிகள் ஒரு வாரம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
உலகம் புகழும் வகையில், இந்தியாவின் 11ஆவது குடியரசு  தலைவராக பணியாற்றிய `பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் மரணமடைந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.
 
தமிழ் அன்னையின் பெருமை மிகு புதல்வராக விளங்கிய டாக்டர் அப்துல் கலாம்-ன்  எளிமையான வாழ்வும், எல்லோரையும் நேசிக்கும்  பண்பும் உலகம் அறிந்த உயர்ந்த  குணங்கள் ஆகும்.
 
அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்கு  ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments