Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மறுநாள் ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2015 (13:13 IST)
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு ராமேஸ்வரத்தில் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
அப்துல் கலாம் உடல் சொந்த மண்ணில் அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதேபோல பலரும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
 
இதைத் தொடர்ந்து அப்துல் கலாமின் உடல் நாளை மதியம் 1 மணியளவில் ராமேஸ்வரம் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் வைக்கப்பட்டுள்ள, அப்துல் கலாமின் உடலுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

கள்ளக்காதலை கணவர் ஏற்கவில்லை.. மனவிரக்தியில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை..!

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பதினான்கு பேர், தங்கம் மற்றும் வெள்ளி,பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

சிறிய அளவு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை: தவறி கீழே விழுந்த குடையால் பரபரப்பு..!

நான் மனிதன் அல்ல! பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பப்பட்டேன்! – பிரதமர் மோடி!

Show comments