Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயலே வந்தாலும் பால் விநியோகம் பாதிக்காது! – முன்னேற்பாட்டுடன் ஆவின் மையங்கள்!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (12:41 IST)
வங்க கடலில் உருவான நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் பால் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறியுள்ளது. தீவிர புயலாக உள்ள நிவர் கரையை கடக்கும் முன்னர் அதி தீவிர புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கி விடியும் வரை புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயல் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் மக்களுக்கு அத்தியாவசியமான பால் விநியோகம் தடைபடாமல் இருக்க அனைத்து ஆவின் பாலகங்களிலும் கூடுதலாக பால் பாக்கெட்டுகள் தயாராக உள்ளதாகவும், நகரின் சிக்கலான பகுதிகளில் நடமாடும் பாலகங்கள் மூலமாக பால் பாக்கெட்டுகளை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments