Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயலே வந்தாலும் பால் விநியோகம் பாதிக்காது! – முன்னேற்பாட்டுடன் ஆவின் மையங்கள்!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (12:41 IST)
வங்க கடலில் உருவான நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் பால் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறியுள்ளது. தீவிர புயலாக உள்ள நிவர் கரையை கடக்கும் முன்னர் அதி தீவிர புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கி விடியும் வரை புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயல் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் மக்களுக்கு அத்தியாவசியமான பால் விநியோகம் தடைபடாமல் இருக்க அனைத்து ஆவின் பாலகங்களிலும் கூடுதலாக பால் பாக்கெட்டுகள் தயாராக உள்ளதாகவும், நகரின் சிக்கலான பகுதிகளில் நடமாடும் பாலகங்கள் மூலமாக பால் பாக்கெட்டுகளை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments