Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதித்த ஆவின் ஊழியர் உயிரிழப்பு! – சென்னையில் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (13:03 IST)
சென்னையில் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்த ஊழியர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்த ஊழியருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு கடந்த 26ம் தேதி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் ஆவின் பண்ணை ஊழியர்கள் பலர் வேலைக்கு வர தயக்கம் காட்டியதாகவும் அந்நாட்களில் செய்தி வெளியானது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆவின் ஊழியர் இன்று உயிரிழந்துள்ளார். சென்னையில் இன்றைய நிலவரப்படி கொரோனா பாதிப்புகள் 15 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்த சில வாரங்களில் கொரோனா பாதிப்பு குறையும் என கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பு அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

முன்பெல்லாம் தங்கம், வெள்ளி விலையை தினசரி கேட்போம்.. இப்போது கொலை எண்ணிக்கையை கேட்கிறோ: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments