Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக நிர்வாகி எரித்துக் கொலை: அதிர்ச்சியில் ஆண்டிப்பட்டி

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (13:18 IST)
ஆண்டிப்பட்டியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் மர்மமான முறையில் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். சொந்தமாக இரண்டு கார்களை வைத்து வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருகிறார். மேலும் ஆண்டிபட்டி ஒன்றிய அதிமுக மாணவர் அணி துணை செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
நேற்று இரவு முழுவதும் சதீஷை காணவில்லை. இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சதீஷ் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடப்பதை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சதீஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments