Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்! – காவிரி ஆற்றில் குவிந்த மக்கள்!

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (08:22 IST)
இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் நிலையில் காவிரி ஆற்றங்கரையில் மக்கள் குவிந்து வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் காவிரி ஆற்றை மக்கள் வழிபடுவது வழக்கமாக உள்ளது. மேலும் இந்நாளில் பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நீடிக்கவும், திருமணமாகாத இளம்பெண்கள் திருமணம் விரைவில் நடக்கவும் வேண்டி மஞ்சள் கயிறு அணிந்து கொள்வர்.

இதுதவிர மூத்தோரை வழிபடுத்தல், இஷ்ட தெய்வ வேண்டுதல்களும் ஆடிப்பெருக்கில் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரையில் கூட மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த முறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல பகுதிகளிலும் மக்கள் காலை முதலே ஆற்றங்கரையில் கூடத் தொடங்கியுள்ளனர். திருச்சி காவிரி ஆற்றங்கரை பகுதிகள், மேட்டூர் அணை அய்யனால் கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் கூடி வருவதால் காவல் பாதுகாப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments