Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரியில் நீராடிய கல்லூரி மாணவர் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (12:12 IST)
ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டூர் பகுதியில் காவிரி ஆற்றில் நீராடிய கல்லூரி மாணவரை தண்ணீரில் அடித்துச் சென்றதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


 
ஆடி மாதம் 18 ஆம் தேதி அடிப்பெருக்கு கொண்டாடுவது வழக்கம். அதன்படி, தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 
இதற்காக, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் திறந்துவிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அனல்மின் நிலைய பாலம் அருகே நீராடிக்கொண்டிருந்த நங்கவல்லியைச் சேர்ந்த நாவேந்தன் என்பவரை தண்ணீர் அடித்துச் சென்றது. இதனால் அவர் உயிரிழந்தார்.
 
இவர், மேட்டூர் அரசு கலைக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பி.காம். படித்து வந்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments