யானைக்குட்டியை தோளில் சுமந்து தாய் யானையிடம் சேர்த்த இளைஞர்

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (10:02 IST)
இன்றைய நவீன உலகத்தில், சாலையில் யாராவது அடிபட்டுக் கிடந்தாலே மக்கள் பலர் கண்டும் காணாமலுமாய் செல்கின்றனர். ஆனால் ஊட்டியில் கால்வாயில் தவறி விழுந்த யானைக்குட்டியை இளைஞர் ஒருவர் தமது தோளில் சுமந்து சென்று தாய் யானையிடம் சேர்த்தார்.
ஊட்டியில் உள்ள வனப்பகுதியில் யானைக்குட்டி ஒன்று, தனது தாய் யானையிடமிருந்து வழிதவறி சென்று எதிர்பாராத விதமாக ஒரு கால்வாயில் சிக்கிக்கொண்டது. ரோந்து பணியின் போது குட்டியானை கால்வாயில் சிக்கி இருப்பதை கண்ட வனத்துறையினர், அதனை மீட்டு தாய் யானையிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட யானைக்குட்டிக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்ததால் அதனால் நடக்க முடியவில்லை. வனத்துறை ஊழியர் ஒருவர் சட்டென்று அடிப்பட்ட யானைக்குட்டியை தோளில் சுமந்து சென்று தாய் யானையுடன் சேர்த்தார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அந்த வனத்துறை அதிகாரியை பாராட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments