Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பென்ஷன் தொகை தர 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது

Webdunia
சனி, 28 ஏப்ரல் 2018 (11:25 IST)
பென்ஷன் நிலுவைத் தொகை வழங்க, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர், ராஜேஸ்வரி(83). இவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர் தனது ஓய்வுத் தொகையை அலுவலகத்திற்கு சென்று நேரில் வாங்க முடியாததால் தனது தம்பி பத்மராஜ் என்பவரை கார்டியனாக நியமித்து, தம்பியிம் மூலம் ஓய்வுத் தொகையை பெற்று வந்தார்.
 
80 வயது தாண்டினால், பென்ஷன் தொகையில், 20 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும். மூன்று ஆண்டுகளாக கூடுதல் தொகை நிலுவையில் உள்ளது. இதை பெற பத்மராஜ் செய்யாறு சார்நிலை கருவூல அதிகாரி ஷாகிதா(37)வை நாடியுள்ளார். அதற்கு அவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். 
இதனையடுத்து பத்மராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பத்மராஜிடம், 10 ஆயிரம் ரூபாயை, ஷாகிதா வாங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஷாகிதாவை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments