Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பெஷல் சக்தி பெற 3 வயது குழந்தையை நரபலி கொடுத்த பெண் மந்திரவாதி

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2018 (11:24 IST)
புதுக்கோட்டையில் பெண் மந்திரவாதி ஒருவர் 3 வயது குழந்தையை நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நாட்டில் பெண் பிள்ளைகள் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சேலம் சிறுமி ராஜலட்சுமி கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை எற்படுத்தியது.
 
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் குரும்பட்டியில், பெண் மந்திரவாதி ஒருவர் வெள்ளைச்சாமி முருகாயியின் 3 வயது ஷாலினியை கடத்திக் கொண்டு போகியிருக்கிறார்.
 
பின்னர் கொடூரத்தின் உச்சமாய் தனது மந்திரசக்தியை அதிகரிக்க அந்த பிஞ்சுக் குழந்தையை கழுத்தறுத்துக் கொன்றுள்ளார்.
 
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீஸார் அந்த பெண் மந்திரவாதியை பிடித்து விசாரித்தனர். முதலில் ஒன்றும் தெரியாதது போல் பேசிய அந்த பெண் மந்திரவாதி, போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் தன் மந்திர சக்தியை அதிகரிக்க சிறுமியை நரபலி கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.
 
இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவரையெல்லாம் சிறையில் அடைக்காமல் உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என்பதே மக்கள் பலரின் கருத்தாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments