சொத்துக்காக கணவனை கட்டிப்போட்டு சூடுவைத்து கொடுமைபடுத்திய மனைவி

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (14:44 IST)
சென்னிமலையில் பெண் ஒருவர் சொத்திற்காக கணவனை கட்டிப்போட்டு சூடு வைத்து சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை தெற்கு புது வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (50). இவரது மனைவி லலிதா (45). இவர்களுக்கு ஸ்ரீநாத் (20) என்ற மகன் உள்ளார்.  ரமேஷிற்கு நிறைய சொத்துக்கள் உள்ளது. 
 
இந்நிலையில் ரமேஷ் பேரில் உள்ள அனைத்து சொத்துக்களையும் தனது பெயரில் மாற்றிக்கொடுக்கும்படி அவரது மனைவி லலிதாவும், மகன் ஸ்ரீநாத்தும் ரமேஷை டார்ச்சர் செய்து வந்துள்ளனர்.
 
ஆனால் ரமேஷ் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு பார்க்கலாம் என கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் அவ்வப்போது சண்டை இருந்து வந்துள்ளது.
 
சமீபத்தில் இது சம்மந்தமாக அவர்களுக்குள் சண்டை ஏற்படவே லலிதாவும், ஸ்ரீநாத்தும் சேர்ந்து, ரமேஷை ஒரு ரூமில் கட்டிப்போட்டு சித்ரவதை செய்தனர். இருவரும் சேர்ந்து அவரது உடலில் பல இடங்களில் சூடுபோட்டு சித்ரவதை செய்தார்கள்.
 
இதனையறிந்த அவரது பக்கத்து வீட்டுக்காரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் ரமேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் லலிதாவையும், ஸ்ரீநாத்தையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments