Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிலில் பலே திருட்டு.. ஆனால் அசந்து தூங்கியதால் சிக்கிய திருடன்!

Prasanth K
வியாழன், 19 ஜூன் 2025 (10:39 IST)

கோவையில் கோவிலில் திருடிவிட்டு, அங்கேயே படுத்துத் தூங்கிய திருடன் பிடிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை புதூர் பகுதியில் பால விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. அங்கு கோவில் குருக்கள் வழக்கம்போல காலையில் சென்று கதவை திறந்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அதேசமயம் உண்டியலுக்கு சற்று தொலைவில் ஒரு நபர் மதுபோதையில் முழுத் தூக்கத்தில் இருந்தார். திருடிய பணம் அவரிடம் இருந்துள்ளது.

அந்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்த நிலையில், அவர் காரைக்கால் நெடுங்காடு பகுதியை சேர்ந்த சின்னையன் என்பது தெரிய வந்துள்ளது. காரைக்காலில் பல திருட்டு வழக்குகள் ஏற்கனவே அவர் மீது உள்ளது.

 

புதூரில் வாடகை வீடு எடுத்து கட்டிட வேலைகளுக்கு சென்று வந்த சின்னையன் பால விநாயகர் கோவிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைத்து 8 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளார். மேலும் கோவிலில் இருந்த சில பொருட்களையும் திருடியுள்ளார். புறப்பட இருந்த நேரத்தில் மழை பெய்ததால், மழை நின்றதும் கிளம்பலாம் என ஒரு ஓரமாக படுத்தவர் நன்றாக அசந்து தூங்கியுள்ளார். அதனால் காலையில் அவராகவே மாட்டுக் கொண்டுள்ளார். 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முடிவே இல்லையா? ஒரே நாளில் 3 இண்டிகோ விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள்: பயணிகள் அச்சம்!

உச்சக்கட்ட பாதுகாப்புடன் ரிலீஸாகிறது ‘தக் லைஃப்’! - கர்நாடக அரசு எடுத்த முடிவு!

ஜிமெயில் Unsubscribe பட்டனை கிளிக் செய்தால் எல்லாம் போச்சு: ஹேக்கர்களின் புதிய தந்திரம் - உஷார்!

ஜப்பானின் முதல் மறுபயன்பாடு ராக்கெட் சோதனை வெற்றி! சாதித்த ஹோண்டா! - விண்வெளி ஆய்வில் புதிய ஆரம்பம்!

ஜூஸ் கடைகளில் ப்ளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்த தடை! மீறினால் கடும் நடவடிக்கை! - உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments