Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவின் பால் பாக்கெட் விலை திடீர் உயர்வு! – பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2023 (09:43 IST)
தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினில் குறிப்பிட்ட பால் பாக்கெட்டுகளின் விலை உயர்வை சந்தித்துள்ளது.



பொதுத்துறை நிறுவனமான ஆவின் பல்வேறு நிற பாக்கெட்டுகளில் டோண்ட் பால் பாக்கெட்டுகளை வெவ்வேறு அளவுகளில் விற்பனை செய்து வருகிறது. கால் லிட்டர் தொடங்கி அரை லிட்டர், ஒரு லிட்டர், 5 லிட்டர் என பல அளவுகளில் பால் பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன.

இதில் 5 லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் பெரும்பாலும் டீக்கடைகளால் வாங்கப்படுகின்றன. நேற்று வரை 5 லிட்டர் எடைக்கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் ரூ.210க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று ரூ.10 உயர்ந்து ரூ.220 ஆக விற்பனையாகி வருகிறது.

இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்களுக்கும், தேநீர் கடை உரிமையாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது டீ, காபி விலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments