நாகர்கோவில் - தாம்பரம்: சென்னை திரும்பும் பொதுமக்களுக்கு சிறப்பு ரயில்..!

Siva
புதன், 17 ஜனவரி 2024 (12:39 IST)
பொங்கல் விடுமுறை முடிவடைந்ததை அடுத்து இன்று முதல் தென் மாவட்ட மக்கள் சென்னை திரும்ப உள்ள நிலையில் சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் ஒன்றை இயக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.
 
நாகர்கோவில் - தாம்பரம் ரயில் இன்று மாலை 4:30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படுகிறது இந்த ரயில் தாம்பரத்திற்கு நாளை அதிகாலை 4.10 மணியளவில் வந்து சேருன். மேலும் இந்த ரயில் நாளை காலை 8 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.
 
 11 ஏசி பெட்டிகள், ஐந்து முன்பதிவு பெட்டிகள்,  இரண்டு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ரயிலானது  திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திருச்சி வழியாக தாம்பரம் வந்தடைகிறது என்றும் இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments