Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் காவல் நிலையம் அருகே பிரபல ரவுடி வெட்டிக் கொலை

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (10:09 IST)
சென்னையில் பிரபல ரவுடி ஒருவன் காவல் நிலையம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி தனசேகர் பல கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் வழக்கில் தொடர்புடையவன். சமீபத்தில் இவனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அவன், திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஆஜராகி தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளான்.
 
நேற்றும் இதேபோல் காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்துள்ளான். அவனைக் கொல்லை திட்டமிட்டு வெளியே அவனுக்காக காத்திருந்த மர்ம நபர்கள், தனசேகரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர்.
 
ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த தனசேகர் சம்பவ இடத்திலே உயிரிழந்தான். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தனசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தனசேகரை கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments