Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் பொன்முடி மனைவி பெயரில் இயங்கி வரும் நிறுவனத்தில் கொள்ளை.. போலீசார் விசாரணை

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (12:26 IST)
அமைச்சர் பொன்முடியின் மனைவி பெயரில் இயங்கி வரும் இரு சக்கர வாகன விற்பனை நிலையத்தில் கொள்ளை நடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் என்ற பகுதியில் அமைச்சர் பொன்முடியின் மனைவி பெயரில் இயங்கி வரும் இரு சக்கர வாகன விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் இன்று கொள்ளை சம்பவம் நடந்துள்ளது

இந்நிறுவனத்தின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே இருந்த 2 லாக்கர்களை மர்ம நபர்கள் தூக்கி சென்றனர். இரு லாக்கரிலும் ரூ.3 லட்சம் பணம் மற்றும் 6 கிராம் தங்க நாணயங்கள் இருந்ததாக தெரிகிறது.

லாக்கரை தூக்கிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அமைச்சர் பொன்முடி மனைவி பெயரில் இயங்கி வரும் நிறுவனத்தில் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments