அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் கட்டும் பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை..!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (14:25 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து தற்போது ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்து கொண்டிருக்கும் நிலையில் அவரது சகோதரர் அசோக்குமார் கரூரில் கட்டி வரும் பங்களாவில் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சற்று முன் சோதனை செய்ய வந்ததாகவும் அசோக் குமார் தனது மனைவி பெயரில் இந்த வீடு கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
 இரண்டு வாகனங்களில் இந்த பங்களாவை சோதனை செய்ய அதிகாரிகள் வந்ததாகவும் அவர்களுக்கு பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
சென்னையில் ஒரு பக்கம் விறுவிறுப்பாக செந்தில் பாலாஜி இடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் கரூரில் அவரது சகோதரர் கட்டி வரும் பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments