ஏ ஆர் ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி! - போன் செய்து விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Prasanth Karthick
ஞாயிறு, 16 மார்ச் 2025 (11:08 IST)

பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போன் செய்து நலம் விசாரித்துள்ளார்.

 

இந்திய சினிமாவின் உலகளாவிய இசை அடையாளமாக விளங்குபவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் உள்ளிட்ட பல உலகளாவிய விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ள ஏ ஆர் ரஹ்மான், இன்று திடீர் உடல்நலக் குறைவால் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஹ்மானின் உடல்நிலை குறித்து அவரது மருத்துவர்களிடம் போன் செய்து நலம் விசாரித்துள்ளார்.

 

இதுகுறித்து கூறிய அவர் “உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். அவர் நலமாக உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர். மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments