Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைவீதியில் கத்தியுடன் உலாவரும் மர்ம நபர்: பீதியில் பொதுமக்கள்

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2019 (12:13 IST)
கன்னியாகுமரியில் மர்ம நபர் ஒருவர் கத்தியுடன் வலம் வருவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
 
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக நள்ளிரவில் மர்மநபர்கள் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
 
இந்நிலையில் இரணியல் கடைவீதிகளில் நள்ளிரவில் ஒரு மர்மநபர் கையில் கத்தியுடன் வலம் வருகிறார். ஒரு கடைக்கு சென்று அந்த கடையின் பூட்டை கத்தியால் அறுக்கிறார். இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த மர்ம நபரால் மக்கள் நள்ளிரவு வெளியே செல்ல பயப்படுகின்றனர். 
 
சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸார் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனை கைது செய்த ED அதிகாரி விருப்ப ஓய்வு.. ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணி..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

51 அரசு மருத்துவர்கள் டிஸ்மிஸ்.. சுகாதாரத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கை..!

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments