Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூசாரிக்கு அரிவாள் வெட்டு: பூஜையின் போது தகராறு...

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (07:54 IST)
நாமக்கல்லில் பூஜையின் போது ஏற்பட்ட தகராறில் பூசாரி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நாமக்கல் தூசூர் அருகே பீமநாயக்கனூரில் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது கோவில் பூஜையின் போது இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
 
இந்த சண்டையை விலக்கச் சென்ற கோவில் பூசாரி குப்புசாமியை ஒரு தரப்பினர் அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் பூசாரியையே அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments