Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஜய் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார்.. என்ன காரணம்?

Mahendran
சனி, 20 ஏப்ரல் 2024 (11:55 IST)
நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
நடிகர் விஜய் நேற்று தனது வாக்கை பதிவு செய்ய வந்தபோது விதிமீறல் செய்ததாகவும் அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
சென்னை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரியில் நடிகர் விஜய் நேற்று வாக்களிக்க வந்தபோது விதிமுறைகளை மீறி 200க்கும் மேற்பட்டவர்களுடன் வந்ததாகவும் அதனால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் அதனால் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கூறியுள்ளார். 
 
இந்த மனு மீது விசாரணை நடந்து வருவதாகவும் இந்த மனுவில் உண்மை தன்மை இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments