லக்கேஜை விட்டுவிட்டு பயணிகளை மட்டும் ஏற்றி வந்த விமானம்! - சென்னை வந்த பயணிகள் ஷாக்!

Prasanth Karthick
புதன், 8 ஜனவரி 2025 (09:20 IST)

குவைத்தில் இருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில் லக்கேஜ் இல்லாததால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

 

 

பொதுவாக விமானங்களில் பயணிகள் தங்கள் கைப்பைகளை தவிர்த்து பிற லக்கேஜுகளை தனியாக அளிப்பதும், அவற்றை விமான நிலையங்களில் கன்வேயர் பெல்ட் பகுதியில் சேகரித்துக் கொள்வதும் வழக்கமாக உள்ளது.

 

இந்நிலையில் குவைத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த ஏர் இந்தியா விமானத்தில் 248 பேர் வந்துள்ளனர். அவர்கள் தங்கள் லக்கேஜ்களை சேகரிக்க கன்வேயர் பெல்ட் சென்றபோது 12 பேருடைய லக்கேஜ் மட்டுமே அதில் வந்துள்ளது.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் விமான நிறுவன அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

மோசமான வானிலை காரணமாக விமானத்தின் எடையை குறைக்க உடமைகள் அனைத்தும் குவைத் விமான நிலையத்திலேயே விடப்பட்டுள்ளதாகவும், இரண்டொரு நாட்களில் வேறு விமானத்தின் மூலம் அவை கொண்டு வரப்பட்டு பயணிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று கொடுக்கப்படும் எனவும் சொல்லி அதிகாரிகள் சமாதானம் செய்துள்ளனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments