Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லக்கேஜை விட்டுவிட்டு பயணிகளை மட்டும் ஏற்றி வந்த விமானம்! - சென்னை வந்த பயணிகள் ஷாக்!

Prasanth Karthick
புதன், 8 ஜனவரி 2025 (09:20 IST)

குவைத்தில் இருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில் லக்கேஜ் இல்லாததால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

 

 

பொதுவாக விமானங்களில் பயணிகள் தங்கள் கைப்பைகளை தவிர்த்து பிற லக்கேஜுகளை தனியாக அளிப்பதும், அவற்றை விமான நிலையங்களில் கன்வேயர் பெல்ட் பகுதியில் சேகரித்துக் கொள்வதும் வழக்கமாக உள்ளது.

 

இந்நிலையில் குவைத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த ஏர் இந்தியா விமானத்தில் 248 பேர் வந்துள்ளனர். அவர்கள் தங்கள் லக்கேஜ்களை சேகரிக்க கன்வேயர் பெல்ட் சென்றபோது 12 பேருடைய லக்கேஜ் மட்டுமே அதில் வந்துள்ளது.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் விமான நிறுவன அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

மோசமான வானிலை காரணமாக விமானத்தின் எடையை குறைக்க உடமைகள் அனைத்தும் குவைத் விமான நிலையத்திலேயே விடப்பட்டுள்ளதாகவும், இரண்டொரு நாட்களில் வேறு விமானத்தின் மூலம் அவை கொண்டு வரப்பட்டு பயணிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று கொடுக்கப்படும் எனவும் சொல்லி அதிகாரிகள் சமாதானம் செய்துள்ளனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments