Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் நுழைந்த நபரால் பரபரப்பு

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (19:45 IST)
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் நுழைந்த நபரால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோயில் அண்ணாமலையார் கோவில். இந்தக் கோவிலில் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம் மற்றும் அம்மணியம்மன் கோபுரம் ஆகிய மூன்று வாயில் வழியாக பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில்,   இன்று நண்பகல் வேளையில், தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரம் வழியாக நபர் ஒருவர்  அனுமதியின்றி  கத்தியுடன் நுழைந்து, அங்கிருந்த பக்தர்களை பயமுறுத்தினார்.

உடனே பக்தர்கள் அங்கிருந்து கத்திக்கொண்டு ஓடினர்.   பின்னர், கோவிலிலுள்ள ஊழியர்களிடம் அவர் தகராறு செய்தார்.

இதுகுறித்து, ஊழியர்கள் அங்கிருந்த போலீஸாரிடம் புகாரளித்தனர்.  எனவே போலீஸார், குடிபோதையில் கத்தியுடன்  நுழைந்த   நபரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments