Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் நுழைந்த நபரால் பரபரப்பு

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (19:45 IST)
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் நுழைந்த நபரால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோயில் அண்ணாமலையார் கோவில். இந்தக் கோவிலில் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம் மற்றும் அம்மணியம்மன் கோபுரம் ஆகிய மூன்று வாயில் வழியாக பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில்,   இன்று நண்பகல் வேளையில், தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரம் வழியாக நபர் ஒருவர்  அனுமதியின்றி  கத்தியுடன் நுழைந்து, அங்கிருந்த பக்தர்களை பயமுறுத்தினார்.

உடனே பக்தர்கள் அங்கிருந்து கத்திக்கொண்டு ஓடினர்.   பின்னர், கோவிலிலுள்ள ஊழியர்களிடம் அவர் தகராறு செய்தார்.

இதுகுறித்து, ஊழியர்கள் அங்கிருந்த போலீஸாரிடம் புகாரளித்தனர்.  எனவே போலீஸார், குடிபோதையில் கத்தியுடன்  நுழைந்த   நபரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments