தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஒருவர் கைது

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (22:05 IST)
விருதுநகர்  குல்லூர்சந்தை பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஒருவர் கைது 30 கிலோ குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.
 
விருதுநகர் அருகே உள்ள குல்லூர் சந்தையில் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (54) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
 
இந்த மளிகைகடையில்  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை  அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவுபடி சார்பு ஆய்வாளர்கள் கார்த்திகா, சிவனேசன், முதல் நிலைக் காவலர்கள் மாரிமுத்து, திலிப் குமார் ஆகியோர் தலைமையில்  அந்த கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுகிறதா என்று சோதனை செய்தனர்
 
அந்த சோதனையில்  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போன்ற போதைப்  பொருட்கள் 30 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது மேலும்  கடை உரிமையாளர் மாரியப்பன் (54) என்பவரை சூலக்கரை காவல்துறையினர்  கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments