Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனர் ரவி புகார் எதிரொலி: தமிழக தலைமை செயலாளர் இறையன்புவுக்கு நோட்டீஸ்..!

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (09:19 IST)
தமிழக ஆளுநர் ரவியின் புகார் காரணமாக தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சமீபத்தில் ஆளுநர் ரவி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு கூறியது குறித்து கூறிய அவர் ’அது பொய் வழக்கு’ என்று தெரிவித்தார். 
 
சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்வதாக பொய் வழக்கு போடப்பட்டது என்றும் இந்த வழக்கில் 6, 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு செய்து தெரிவித்தார்
 
நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட கன்னித்தன்மை சோதனை செய்வது குழந்தைகள் உரிமை மீறல் என்றும் அவர் புகார் அளித்தார். இதனை அடுத்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது 
 
சிதம்பரம் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விவரங்களை தெரிவிக்குமாறு அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர், இதில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

அடுத்த கட்டுரையில்