Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை இன்று திறப்பு

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (07:54 IST)
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், புதிய சிலை இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் , திறக்கப்பட உள்ளது.

முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த புதிய சிலையை இன்று காலை 9.15 மணிக்கு திறந்து வைக்கவுள்ளனர். ஆந்திராவில் வடிவமைக்கப்பட்ட இந்த சிலை கடந்த மாதம். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

கடந்த பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று ஒரு சிலை அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டது. ஆனால் இந்த சிலை ஜெயலலிதா போன்று இல்லை என்று அதிமுகவினர்களே அதிருப்தி அடைந்ததை அடுத்து புதிய சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று புதிய சிலை வைக்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments