Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசை ஆசையாக பெற்றோர் வாங்கி கொடுத்த புது பைக்..! விபத்தில் சிக்கி பலியான மகன்..!!

Senthil Velan
சனி, 17 பிப்ரவரி 2024 (12:40 IST)
காரைக்குடியில் பெற்றோர் வாங்கி கொடுத்த புது பைக்கில் வேகமாக சென்ற மகன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன்  சபரி (வயது 19) விலை உயர்ந்த பைக் வாங்கி தருமாறு தந்தையிடம் கேட்டுள்ளார்.
 
மகனின் ஆசைப்படி கடந்த வாரம் R15 பைக் வாங்கி கொடுத்துள்ளார்.  புதிய பைக்கை எடுத்துக் கொண்டு  சபரி தனது நண்பர்  குமார் (வயது 18) ஏற்றிக் கொண்டு காரைக்குடி அருகே  மாத்தூரில் இருந்து இலுப்பக்குடி செல்லும் சாலையில்  அதிவேகமாக சென்றார்.

அப்போது வளைவில் திரும்பும்போது கட்டுபாட்டை இழந்த பைக், தடுப்பு சுவரில் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே சபரி உயிரிழந்தார்.  
 
தலையில் பலத்த காயமடைந்த குமார், உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக  சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ALSO READ: வானிலை மாற்றங்களை கண்டறிய ராக்கெட் மட்டும் போதாது..! ரேடார் கட்டமைப்புகளை உருவாக்க பொன்ராஜ் வலியுறுத்தல்.!!

இந்த விபத்துக் குறித்து காரைக்குடி அழகப்பாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் வாங்கி கொடுத்த புது பைக்கில் வேகமாக சென்று மகன் பலியான சம்பவம் காரைக்குடியில் பெண் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments