Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்கு என நினைத்து ஆசிட்டை குடித்த நபர்

Webdunia
சனி, 17 நவம்பர் 2018 (08:43 IST)
புதுவையில் நபர் ஒருவர் சரக்கு என நினைத்து துணி வெளுக்கும் ஆசிட்டை குடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
புதுவை கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவருக்கு அமராவதி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். தமிழரசன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். தினமும் மலையில் வீட்டிற்கு வரும்போது மது பாட்டிலோடு தான் வருவார்.
 
இந்நிலையில் நேற்றும் மதுபாட்டிலோடு வீட்டிற்கு வந்த அவர், மதுபாட்டிலை துணி வெளுக்கும் ஆசிட் பாட்டிலிற்கு பக்கத்தில் வைத்துவிட்டு கழிவறைக்கு சென்றுள்ளார்.
 
வெளியே வந்த அவர் மது பாட்டிலிற்கு பதிலாக அந்த ஆசிட் பாட்டிலை எடுத்து குடித்துள்ளார். சற்று நேரத்தில் மயக்கமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

இரவோடு இரவாக சென்னையை வெளுத்த மழை! விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments