Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேவலம் சொத்துக்காக குடும்பமே சேர்ந்து தந்தையை கொலை செய்த அவலம்

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2019 (07:41 IST)
சென்னையில் கேவலம் சொத்துக்காக குடும்பமே சேர்ந்து தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசுக்கும், சொத்துக்கும் இருக்கும் மதிப்பு மனிதர்களுக்கு இல்லை. இந்த கொடுமையால் பல நேரங்களில் பல அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. சமீபத்தில் சொத்துக்காக பெண் ஒருவர் அவரது தந்தையை ரௌடிகளை ஏவி வீட்டிலிருந்து தூக்கி வெளியே வீசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
சென்னை ஜேஜே நகரை சேர்ந்த ஜேசுராஜன். இவரது மனைவி கலா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சமீபத்தில் ஜேசுராஜன் கலாவின் தம்பி கோபாலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
 
போலீஸார் கோபாலிடம் விசாரித்ததில், ஜேசுராஜனின் சொத்துக்களை அபகரிக்க அவர் இப்படி செய்ததாக தெரியவந்தது. கோபாலின் பின்னணியில் யாரோ இருப்பதாக சந்தேகித்த போலீஸார் அவனிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் சொத்துக்காக தனது அக்கா கலா மற்றும் அவரது பிள்ளைகளுடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாக கூறினான். 
 
இதையடுத்து போலீஸார் அனைவரையும் கைது செய்தனர். சொத்துக்காக அநியாயமாக குடும்பமே சேர்ந்து தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments