Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய் இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட மகன்

Webdunia
புதன், 25 ஜூலை 2018 (11:07 IST)
அம்மா இல்லாத உலகத்தில் நான் இருக்க மாட்டேன் என தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆரப்பாளையம் மேலமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி (80). இவரது கணவர் பல வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் கடைசி மகன் சிவாஜி செல்வரங்கனின் (58), மனைவி இறந்ததால் அவர் தனது தாயுடன் வசித்து வந்தார்.
 
கடந்த ஞாயிறன்று உடல் நலக்குறைவால் அவரது தாய் உயிரிழந்துவிட்டார். தனலட்சுமியின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. தாயின் பிரிவை தாங்க முடியாத சிவாஜி, புலம்பிக் கொண்டே இருந்தார்.
 
இந்நிலையில் அம்மா இல்லாத உலகத்தில் இனி நாம் இருக்கக்கூடாது எனக் கருதி நேற்று சிவாஜி குருணை மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் ஆரப்பாளையம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரே பாராட்டிய தமிழ்நாட்டின் ஏரி மனிதன்! யார் இந்த நிமல் ராகவன்?

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments