Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை பறிபோன விரக்தியில் நடுரோட்டில் தீக்குளித்த இளைஞர்

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (10:29 IST)
திருப்பூரில் வேலை பறிபோன விரக்தியில் வாலிபர் ஒருவர் நடுரோட்டில் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் குமார் நகரை சேர்ந்த அருள்பிரகாஷ் என்பவர் அந்த பகுதியில் உள்ள தனியார் உனவகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். கடையில் திருடுவதை இவர் வாடிக்கையாக வைத்துள்ளார். ஹோட்டல் நிர்வாகமும் பலமுறை இவரை எச்சரித்துள்ளது.
 
இந்நிலையில் அருள்பிரகாஷை அழைத்த ஹோட்டல் உரிமையாளர், ஹோட்டலில் போதிய அளவு  வருமானம் இல்லாததால் கடையை மூடப்போவதாகவும், வேறு வேலை பார்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அருள்பிரகாஷ் நடுரோட்டில் தன்மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத்துறையினர்  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அருள்பிரகாஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments