விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்து ஓடிய லாரி ஓட்டுநர் மாரடைப்பால் மரணம்

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (10:47 IST)
திருச்சியில் ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்து ஓடிய லாரி ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரிலிருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு காரைக்குடியை நோக்கி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரியி டயர் வெடித்ததால், தாறுமாறாக ஓடி அது ஆட்டோ மீது மோதியது.
 
இதில் ஆட்டோ டிரைவர் மோகன்(35) சம்பவ இடத்திலே உயிரிழக்க அவருடன் வந்த செந்தாமரைக்கண்ணன்(45), டி.சுப்பிரமணியன்(31) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் சேகர், தப்பித்து ஓட முயற்சித்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். போலீஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

தீபத்திருநாள் வாழ்த்து கூறிய போஸ்டை திடீரென நீக்கிய செங்கோட்டையன்.. மீண்டும் பதிவு செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments