Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

Prasanth Karthick
வெள்ளி, 27 டிசம்பர் 2024 (16:14 IST)

திமுகவை கண்டித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டது குறித்து நடிகை கஸ்தூரி வேதனை தெரிவித்துள்ளார்.


 


 

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் வெளிநபரால் வளாகத்திலேயே வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ஆளும் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்த சென்றபோது தடுத்து கைது செய்யப்பட்டனர்.

 

இதுகுறித்து ஆவேசத்துடன் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மக்கள் விரோதமாக செயல்படும் திமுகவை ஆட்சியை விட்டு அகற்றும் வரை செருப்பு அணியப் போவதில்லை என்றும், தன்னை தானே 6 முறை சாட்டையால் அடித்துக் கொள்ள போவதாகவும் கூறியிருந்தார். இன்று காலை அவ்வாறே தன் வீட்டு வளாகத்தில் தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். அதை தொடர்ந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த பாஜகவினரும் தங்களை தாங்களே சாட்டையால் அடித்துக் கொண்டு வருகின்றனர்.
 

ALSO READ: கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

 

அண்ணாமலையில் இந்த போராட்டம் குறித்து பதிவிட்டுள்ள நடிகை கஸ்தூரி “என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை. சமூகவிரோதிகளை அடிச்சு தூக்க வேண்டிய தலைவன் தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொள்ளுவதை பார்க்க முடியவில்லை. அண்ணாமலையின் வழி அனைவரின் வலியானால், தமிழகம் அரசீற்றம் கொண்டால், மாற்றம் வரும். வரவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments