Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா கூட்டணியில் இணைந்த அதிமுக.. புதுவையில் பரபரப்பு..!

Siva
வெள்ளி, 8 மார்ச் 2024 (06:57 IST)
சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையை கண்டித்து புதுச்சேரியில் இன்று பொதுமுடக்கம் செய்யப்படுவதாகவும், இந்தியா கூட்டணியுடன் அதிமுக இணைந்து இந்த போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையை கண்டித்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புதுச்சேரியில் பந்த் போராட்டம் நடக்கிறது. மேலும் இன்று மாலை 4 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடத்தவும் முடிவு. அதேபோல்  
சிறுமியின் கொலையை கண்டித்து அதிமுக சார்பில் இன்று பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி மற்றும் அதிமுகவின் இந்த அறிவிப்பு காரணமாக புதுச்சேரியில் இன்று பந்த் நடைபெறுகிறது. இதனால் இன்று புதுச்சேரியில் கடைகள் இயங்காது, பஸ்கள்,  ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சிறுமி கொலையை கண்டித்து, வணிகர்கள், பஸ் உரிமையாளர்கள், தாங்களாகவே  முன்வந்து பந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

சூடான கல்லில் 10 வினாடி உட்கார்ந்த மூதாட்டி.. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்