Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரிலிருந்து தத்தகிரி புறப்பட்ட வேல் காவடியாத்திரை குழு

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (22:59 IST)
ஆடிகிருத்திகையையொட்டி கரூரிலிருந்து தத்தகிரி புறப்பட்ட வேல் காவடியாத்திரை குழு
 
கரூர் நகரத்தார் சங்க மக்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும், கரூர் மாவட்டம், மாயனூர் செல்லாண்டியம்மன் ஆலயத்திலிருந்து வேல் காவடியை சுமந்து கரூர் நகரத்தார் மண்டபம் அடைந்து பின்னர் அங்கிருந்து நாமக்கல் மாவட்டம் தத்தகிரி முருகன் ஆலயத்திற்கு சென்று ஆடிக்கிருத்திகையை வருடா வருடம் வழிபடுவது வழக்கம், இந்நிலையில், காவடியாத்திரை குழு பாதயாத்திரையாக கரூர் நகரத்தார் சங்கம் வந்து அங்கு ஒய்வெடுத்து விட்டு தத்தகிரி புறப்பட்டு சென்றது. வழிநெடுகிலும், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம், கரூர் மாரியம்மன் ஆலயம் சென்று பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாமக்கல் மாவட்டம், தத்தகிரி புறப்பட்டு சென்றடைந்தது. வழிநெடுகிலும் மேள இசை வாசிக்க, பக்தர்கள் காவடியாத்திரைகுழுவினை தரிசித்து முருகன் அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் நகரத்தார் சங்கம் சிறப்பாக செய்திருந்தது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments