Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்லது செய்யப்போய் சிக்கலில் மாட்டிக் கொண்ட அரசுப்பேருந்து நடத்துனர்

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (11:41 IST)
ஈரோட்டில் அரசுப்பேருந்து நடத்துனர் ஒருவர் இந்தியில் பெயர்ப்பலகை வைத்த காரணத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி - பெருந்துறை சிப்காட் இடையேயான அரசு டவுன் பஸ்சில் நடத்துனராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீனிவாசன். இவர் மற்றவர்களுக்கு உதவி செய்ய செய்த காரியம் அவருக்கே பாதகமாய் அமைந்துள்ளது.
 
கவுந்தப்பாடி - பெருந்துறை சிப்காட் ரூட்டில் ஏராளமான வடமாநில இளைஞர்கள் பேருந்தில் பயணிப்பதால் அவர்களுக்கு புரியும் விதத்தில் இந்தியில் பெயர்ப்பலகையை வைத்துள்ளார். கவுந்தப்பாடி - பெருந்துறை என்று தமிழில் இருந்த பெயரை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மாற்றியமைத்துள்ளார்.
 
இதனையறிந்த மேலதிகாரிகள் அவரை சஸ்பெண்ட் செய்தனர். மற்றவர்களுக்கு உதவி செய்யும் காரணத்திற்காக நடத்துனர் இப்படி செய்திருந்தாலும் கூட, போக்குவரத்துக்கழகம் அளித்த பெயர்ப்பலகையையே உபயோககப்படுத்த வேண்டும். அதுவே விதிமுறை என அதிகாரிகள் தெரிவித்தனர். நல்லெண்ண அடிப்படையில் நடத்துனர் செய்த காரியம் அவருக்கு பாதகமாய் அமைந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments